Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2019 16:40:46 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

கண்டி மாவட்ட நீதிமன்ற நரன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான திட்டத்திற்காக, மத்திய பாதுகாப்பு தலைமையகத்தின் 11 ஆவது படைப் பிரிவு மற்றும் புவலிகடவில் உள்ள சமிக்ஞை பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த 20 இற்கும் அதிகமான இராணுவத்தினரால், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயளர்களின் தேவைகருதி இரத்தானம் வழங்கப்பட்டன.

கண்டி மாவட்ட நீதிமன்ற நரன்புரிச்சங்கத்தினால், 11 ஆவது படைப்பிரின் தலைமையகத்துக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய இவ் இரத்தானமானது வழங்கப்பட்டது.

மேலும், இவ் இரத்ததான நிகழ்வானது கண்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள், கடந்த வியாழக் கிழமை 15 ஆம் திகதி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Authentic Sneakers | Nike Running