08th August 2019 17:57:43 Hours
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பீரங்கி படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வானது, பிரதான அதிதியான இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் பங்களிப்புடன் (8) ஆம் திகதி காலை இடம் பெற்றது.
இந்த நிகழ்விற்கு இப் படைத் தலைமையகத்திற்கு பிரதான அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதிக்கு நுலைவாயில் வரவேற்பு மரியதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து பீரங்கி படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியும் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் ருவான் டி சிலவா அவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, பௌத்த மத ஆசிர்வாத செத் பிரித் வழிப்பாட்டுடன் பிரதான அதிதி அவர்களால் அடிகல் வைக்கப்பட்டதன் பின்னர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட மகா சங்க பௌத்த தேரர்களுக்கு ‘அடபிரிகர’ வழங்கி ஆசீர்வாதங்களையும் பெற்றன.
இராணுவ தளபதி அவர்கள் இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் மா மரக்கன்றையும் நட்டுவைத்தார். அதனைத் தொட்ந்து அனைவருடனும் இணைந்து குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார். பின்னர் தளபதி கட்டுமானத் திட்டம் மற்றும் கட்டடக்கலை வடிவமைப்பு தொடர்பாக விளக்கத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் இராணுவ தளபதி அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் அழைப்பை ஏற்று பீரங்கி படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட படையினர்களுக்கு உரையாற்றினார்.url clone | Air Jordan Release Dates 2020