Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2019 13:13:51 Hours

கொடிகாமத்தில் இராணுவத்தின் உதவியுடன் வீடு கையளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாணத்திலுள்ள கொடிகாமம் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் திருமதி இராஜரத்தினம் ஜயக்குமாரி அவர்களுக்கு இராணுவத்தின் உதவியுடன் இரண்டு அறைகள், ஒரு சாலை மற்றும் சமையலறையை முழுமையாக்கி கொண்ட புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (5) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

நன்கொடையாளர்களான பிரசித்தி பெற்ற பாடகர் திரு பாத்திய ஜயக்கொடி மற்றும் திரு சிந்திக டி சொயிஷா அவர்களின் பாரிய நிதி அனுசரனையுடன் இந்த வீடு முழுமையாக நிர்மானிக்கப்பட்டு பயணாளிக்கு கையளிக்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 522 ஆவது படைத் தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 15 ஆவது கஜபா படையணியினால் இந்த வீட்டு கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டன.

இந்த வீடு பாரமளிக்கும் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, திரு பாத்திய ஜயக்கொடி, திரு சிந்திக டி சொயிஷா 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் S.S வடுகே மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். buy footwear | Air Jordan Release Dates Calendar