Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2019 14:00:10 Hours

662ஆவது காலாட் படை தலைமையகத்தினால் குடி நீர் தாங்கிகள் வழங்கி வைப்பு

உதிரம்புர கோவில் சங்க தலைவி திருமதி ஸ்ரீ ரஜினி அவர்களின் வேண்டுகோளிற்கமைய கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உதிரம்புரம், குமரபுரம், மற்றும் உமயாலபுர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்யுமுகமாக கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் சிறந்த நிருவாகத்தின் கீழ் உள்ள 662 ஆவது காலாட் படை தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் ரவி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 662 ஆவது காலாட் படையினரால் மூன்று வெவ்வேரான பிலாஸ்டிக் குடி நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அன்மையில் 662 ஆவது படைத் தலைமையகம் மற்றும் சமய தலைவர்களுக்கிடையிலான இடம்பெற்ற சந்திப்பின் போது, உதிரம்புர கோவில் சங்க தலைவி திருமதி ஸ்ரீ ரஜினி அவர்களினால் இம் மூன்று கிராமங்களுக்கான குடி நீர் தேவைப்பாடானது சுட்டிக்காட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 662 ஆவது படைத் தலைமையகத்தினால், கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததனையடுத்து 3000 லீட்டர் கொள்ளளவுடைய மூன்று பிலாஸ்டிக் குடி நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், கடந்த சனிக் கிழமையன்று (3) 662 ஆவது படை தலைமையகத்தின் 20இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 1கஜபா படையணியினர் இம் மூன்று பிலாஸ்டிக் குடி நீர் தாங்கிகளை குறித்த பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களின் தேவைகருதி அமைத்து கொடுத்துள்ளனர்.

கடந்த ஓர் இரு ஆண்டுகளாக குறித்த பகுதியில் வரற்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடி நீரானது பாதுகாப்பு படையினரால் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Sneakers | Womens Shoes Footwear & Shoes Online