Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2019 13:58:59 Hours

‘சில்ப சேன’ கண்காட்சியில் இராணுவத்தின் கண்காட்சி கூடாரம்

பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் ‘சில்ப சேன’ கண்காட்சி இம் மாதம் (18) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியின் இறுதி நாள் (21) ஆம் திகதி தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் திரு சுஜீவ சேனசிங்க அவர்களது அழைப்பையேற்று மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்து மங்கள விளக்குகள் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் 21 ஆம் திகதி இந்த கண்காட்சி பூமி வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த இராணுவ கூடார கண்காட்சி நிலையத்திற்கு சென்று இராணுவத்தினரால் முன்வைக்கப்பட்ட கண்காட்சிகளை பார்வையிட்டார்.

மேலும் இந்த கண்காட்சி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Running Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases