Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2019 07:14:28 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் கடந்த திங்கட் கிழமை (15) இராணுவ முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது கடமைப்பொறுப்பை ஏற்றார்.

மேலும்; மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் ஓய்வை மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சின் புதிய நியமனத்தை முன்னிட்டு இவ் அதிகாரியவர்கள் நியமிக்கப்பட்டார்.

இதன் போது மேஜர் ஜெனரல் வனிகசூரிய அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானியான பிரிகேடியர் அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மத வழிபாடுகளுடன் தமது காரியாலயத்தில் உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு இப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் தமது கடமைப் பொறுப்பை எற்றார். இதன் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இப் படைத் தலையைமக வளாகத்தில் தமது கடமைப் பொறுப்பை முன்னிட்டு மரக் கன்றை நட்டுள்ளார். ஆதனைத் தொடர்ந்து படையினருடனான கலந்துரையாடலை மேற்கொண்ட இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் படையினருடனான தேநீர் விருந்துபரசாரத்திலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையகத்தில் காணப்படும் உயிர் நீத்த படையினருக்கான ஞாபகார்த்த தூபியில் தமது அஞ்சலியை செலுத்தினார்.

மேலும் மேஜர் ஜெனரல் வனிகசூரிய அவர்கள் தமது புதிய கடமைப் பொறுப்பிற்கு முன்னர் 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக சேவையாற்றியுள்ளார்.Nike air jordan Sneakers | Air Jordan