15th July 2019 20:56:14 Hours
இலங்கை இராணுவத்தில் சிறப்பான முறையில் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் படையணியின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இம் மாதம் (15) ஆம்திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியவர்கள் இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு இவர்கள் இராணுவத்தில் ஆற்றிய சேவையை கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்து இவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இராணுவ படையணிகளைச் சேர்ந்த 9 ஆணைச்சிட்டு உத்தியோகத்தர்கள் இராணுவ தளபதியை சந்தித்தனர். இவர்கள் இராணுவ சேவையில் குறிப்பாக யுத்தம், தளவாடங்கள் மற்றும் நிர்வாக பிரிவுகளில் சிறப்பாக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இராணுவ தளபதி இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுடன் இவர்களது சுகசெய்தி தொடர்பாக விசாரித்து இவர்களுடன் உரையாடி அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார் . அத்துடன் ஓய்வூ பெற்றுச் செல்லும் இந்த உத்தியோகத்தர்கள் எமது நாட்டிற்கும் ஒரு போதும் பாரமாக இருக்கமாட்டார் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அதனைப் போல் இறுதியாக ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களால் நாம் ஓய்வு பெற்றுச் செல்லும் இச்சமயத்தில் எம்மை தலைமையகத்திற்கு அழைத்து எம்மை கௌரவித்ததிற்கு இராணுவ தளபதி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்கள். Asics footwear | Nike