12th July 2019 23:00:33 Hours
இராணுவத்தினரால் ராகமைப் பிரதேசத்தில் விசேட தேவையுள்ள (பரம்பரை மற்றும் போசாக்கு குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட) சிறார்களுக்காக நிறுவப்படுகின்றன அயதி சிறுவர் காப்பகத்தின் கட்டுமானப் பணிகளை கண்காணிக்கும் நோக்கில் இரணுவ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் மற்றும் சில அதிகாரிகள் போன்றோர் விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன் போது மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்ற 10ஆவது (தொண்டர்) பொறியியல் சேவைப் படையினருடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந் நிர்மானப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஜூலை மாதம் நிறைவடையவுள்ளதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் திறக்கப்படவுள்ளது.
அந்த வகையில் அயதி சிறுவர் காப்பக நிலையமானது இலங்கை அயதி நிலையத்தின் சுமார் 375 மில்லியன் ருபா செலவில் நிர்மானிக்கப்படுகின்றது.
இந் நிர்மானப்பணிக்கான அடிக்கல்லானது கௌரவ பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சரான ருவன் விஜேவர்தன அவர்களால் 03திகதி டிசெம்பர் 2016ஆம் ஆண்டு நடப்பட்டது. Sneakers Store | Nike