Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2019 11:04:15 Hours

புதிய கட்டளை தளபதி நியமிப்பு

கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் எரந்த ரத்னாயக அவர்கள் 512 ஆவது படைத் தலைமையகத்தின் 25 ஆவது கட்டளை தளபதியாக தனது பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதத்தின் பின்னர் பொறுப்பேற்றார்.

யாழ் குடா நாட்டில் அமைந்துள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. பின்னர் கட்டளை தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் 17 ஆவது கஜபா படையணி, 14 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

இதற்கு முன்பிருந்த கேர்ணல் கனிஷ்க ஹெய்யந்துடுவ 533 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக இடமாற்றம் செய்த தன் நிமித்தம் இவர் இந்த படைத் தலைமையகத்திற்கு கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். Asics shoes | Nike Air Max