Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2019 11:15:05 Hours

விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தனது முப்பது வருட சேவையை பூர்த்தி செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்ல இருப்பதனால் இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த அணிவகுப்பு மரியாதைகள் யாழ் கோப்பாயிலுள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (8) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இவர் கலந்து சிறப்பித்தார்.

இவர் 51 ஆவது படைத் தளபதியாக கடமை வகிப்பதற்கு முன்னர் இராணுவ பேச்சாளர் மற்றும் இராணுவ ஊடக பணிப்பாளராக கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | adidas Yeezy Boost 700 , Ietp