Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2019 11:19:22 Hours

புதிய பிரதி பதவிநிலை பிரதானிக்கு தலைமையகத்தில் கௌரவ மரியாதை நிகழ்வு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் புதிய பிரதி பதவிநிலை பிரதானியாக பதவியுயர்த்தியதன் நிமித்தம் இவருக்கு அம்பேபுஸ்ஸ சிங்கப் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதி பதவிநிலை பிரதானியை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சுபாஷ் சிறிவர்தன அவர்கள் வரவேற்றார்.

பின்னர் சிங்கப் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவெல அவர்களது தலைமையில் பிரதி பதவி நிலை பிரதானிக்கு இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் பிரதானியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டு தலைமையக நினைவு தூபிக்கும் சென்று நாட்டிற்காக உயிர தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலிகளையும் செலுத்தினார்.

அன்றைய தினத்தில் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் உபசாரம் மற்றும் பகல் விருந்தோம்பல் நிகழ்விலும் பிரதானி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சிங்கப் படையணியின் உயரதிகாரிகளான மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, இராணுவ காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான, இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக, இராணுவ பொது நிர்வாக பிரதானி A.M.R தர்மசிறி, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உதுலுபொல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். url clone | Autres