Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2019 15:30:10 Hours

58 ஆவது படைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு

போதைப் பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வு காலியிலுள்ள 58 ஆவது படைப் பிரிவு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 21 பேரும், 20 பொலிஸாரும், 30 அரச அதிகாரிகள் மற்றும் 20 சிவிலியன்கள் இணைந்து கொண்டனர்.

‘போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அவற்றை சட்டவிரோதமாக கொண்டு செல்வது’ தொடர்பான தலைப்பில் விரிவுரைகள் இந்த செயலமர்வில் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது தலைமையில் 14 ஆவது கெமுனு காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டில் இடம்பெற்றது.

காலி சிறைச்சாலை மேலதிகாரி திரு ஜகத் சந்தன வீரசிங்க அவர்கள் இந்த செயலமர்வில் விரிவுரைகளை ஆற்றினார். Mysneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf