Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2019 10:39:14 Hours

மட்டக்களப்பில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வு

நாடாளாவியரீதியாக இடம்பெற்று வரும் போதைப் பொருள் தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை (5) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த பாடசாலையின் வேண்டுகோளிற்கு அமைவாக, அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய 200 இற்கும் அதிகமாக பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் எனும் தொணிப் பொருளின் கீழ் பேச்சுப்போட்டி, கலைப் போட்டி, மற்றும் விவாதப் போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் இப் பரிசளிப்பு விழாவானது 23 ஆவது படைப் பிரிவு மற்றும் 231 ஆவது படையகத்தின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உடலுப்பொல ,231 ஆவது படையகத்தின் படைத் தளபதி கேணல் மிகுந்து பெரேரா மற்றும் ஏனைய அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். latest jordans | Entrainement Nike