05th July 2019 16:57:41 Hours
கதிர்காம பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் முப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பரிசோதனைக்காக உலோக சோதனை உபகரணங்கள் (metal detectors) (2) ஆம் திகதி செவ்வாய்கிழமை ருஹூனு கதிர்காம தேவாலயத்தில் வைத்து பஸ்நாயக நிலமே அவர்களால் 12 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
கதிர்காமத்தில் வருடந்தோரும் இடம் பொரும் எசலா பெரஹேரா பண்டிகை ஆரம்பித்ததனைத் தொடர்ந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப் பண்டிகையானது ஜூலை 3 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன, அதற்கமைய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவாலயத்திற்கு வருகை தருவதால் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வரும் பக்தர்களுக்காக 12 ஆவது படைப் பிரிவின் பிரதான நுழைவாயிலில் வைத்து படையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (2) ஆம் திகதி தானம் வழங்கப்பட்டதுடன் ஊழியர்களுடன் இணைந்து இராணுவ சிரேஷ்ட அதிகாரிககளால் பக்தர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டனர். latest Running | Nike Shoes