Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2019 16:07:46 Hours

கண்டியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட ‘தர்மசால’ மூன்று மாடி கட்டடிடம் ஜனாதிபதி அவர்களால் திறந்துவைப்பு

கண்டி வரதென்ன பிரதேசத்தின் “சங்க” நியமன வளாகத்தில் அமைக்கப்பட்ட தர்மசால மூன்று மாடி பிரசங்க மண்டபம் 11 ஆவது படைப் பிரிவின் பொறியியலாளர் சேவைப் படையிணியின் படையினரால் புனரமைக்கபட்டு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் (03) ஆம் திகதி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இப் பணிகள் இலங்கை அமரபுர ஷாசனா ஜோதிக சங்க சபை தலைமையகத்தின் அமைந்திருக்கும் சீமாமலகா வளாகத்தின் நிர்மாண பணிகளுக்கான தேவையை உடரட அமரபுர பிரிவின் மகாநாயக உடரட அமரபுர மகா நாயக தேரர் அவர்களால் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுக்கோளுக்கமைய சிலமாதங்களுக்கு முன் இராணுவ தளபதி ஒப்புதல் அளித்தார். ஆதன் பிரகாரம் இதன் புனர் நிர்மாண பணிகள் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக படையினரல் புனர் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் தொடக்க விழாவில் அமரபுரத்தின் தலைமை தேரர்கள் மகா சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள், 11 ஆவது படைப் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானாயக்கார 111ஆவது படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் ஏராளமான பொத்த பக்தர்கள் கலந்து கொண்டனர். Buy Kicks | Men's Footwear