04th July 2019 13:30:33 Hours
இன்று (4) ஆம் திகதி கடமையின் நிமித்தம் நின்ற படை வீரரது துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்கு முயற்சித்த நபருக்கு படை வீரரினால் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இந்த நபர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுமதித்ததன் பின்பு சிகிச்சை பலனின்றி மரணமானார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு.
காயமடைந்த நபர் (39) வயதுடைய கலுதொடகே உதய பிரதீப் குமார என்று தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அக்மன பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இது தொடர்பான செய்தி விபரம் கீழ்வருமாறு வெளியிட்டுள்ளன.
இன்று பகல் வியாழக் கிழமை 12.05 மணிக்கு அக்மன மானவில் உபானந்த ஜூனியர் கல்லூரியின் பாதுகாப்பு கடமைகளில் இரண்டு படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர். பிரதான நுழைவாயிலில் இருந்த படை வீரரது பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக பாடசாலை வளாகத்தினுள் உட்செல்வதற்கு முயற்சித்த போது படையினரால் இவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கும் போது இந்த நபர் படை வீரரது துப்பாக்கியை பரிப்பதற்கு முயற்சித்ததனால் படை வீரரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது இவர் காயமுற்ற கராபிடிய வைத்தியசாலைக்கு அனுமதித்ததன் பின்பு சிகிச்சை பலனின்றி மரணமானார். இது தொடர்பாக அக்மன பொலிஸாரினால் விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Authentic Sneakers | Air Max