Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2019 10:46:23 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா சமய அனுஷ்டான ஆசிர்வாத ‘நிகழ்வுகளுடன் கடந்த ஜூன் மாதம் (26) ஆம் திகதி இடம்பெற்றது.

மஹாசங்க தேரர் மடுகந்த மஹா வித்தியாலய மஹா விகாரதிபதியின் தலைமையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பங்களிப்புடன் (27) ஆம் திகதி ‘பிரித்’ தான நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன் போது படைத் தளபதிகள், படைத் தலைமையக கட்டளை தளபதிகள், படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

இரனைமடு கண்ணாம்பிகை அம்மன் கோயிலில் இந்த ஆண்டு நிறைவை நினைவு படுத்தும் முகமாக விஷேட பூஜைகள் கிளிநொச்சி படைத் தளபதியின் பங்களிப்புடன் ஜூன் (27) ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சி ஜூம்மா பள்ளிவாசலில் ஜுன் (28) ஆம் திகதி படைத் தளபதியின் பங்களிப்புடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு விஷேட பிறார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் கிளிநொச்சி புனித திரேஷா கிறிஸ்தவ தேவாலயத்தில் விஷேட ஆசிர்வாத பிறார்த்தனை பூஜைகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஜுன் மாதம் (29) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களுக்கு 8 ஆவது இலங்கை பீரங்கிப் படையணியினால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொண்டு, அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்ற பகல் விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். latest jordan Sneakers | adidas Yeezy Boost 350