Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2019 15:10:31 Hours

‘ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனத்தினர் இராணுவ மரநடுகைத் திட்டத்திற்கு உதவிகள்

இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்படும் மரநடுகைத் திட்டத்திற்கு ‘ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனத்தினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

‘ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனத்தின் உயரதிகாரிகளான மெஷ்ரஷ் பிரதீபா கெகுலாவல, தனுஷ்க டி சில்வா அவர்களினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிற்கு 5000 மரக்கன்றுகள் பத்திர படிவங்களுடன் இன்று காலை (25) ஆம் திகதி இராணுவ தளபதியின் பணிமனையில் வைத்து கையளிக்கப்பட்டன.

மீ, பலா, கும்புக், ஈரப்பலா, மா, நா போன்ற மரக்கன்றுகள் வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்காக வழங்கி வைக்கப்பட்டன. இவர்களுக்கு இராணுவ தளபதி அவர்கள் இந்த மரநடுகைத் திட்டத்திற்காக வழங்கிய உதவியை முன்னிட்டு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.Adidas shoes | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos