Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2019 13:10:21 Hours

இராணுவ ஏற்பாட்டில் இடம்பெற்ற பரஸ்பர பயண நிறைவு

இந்தியாவின் முப்படையைச் சேர்ந்த பிரதிநிதி குழுவைச் சேர்ந்த 159 அங்கத்தவர்கள் இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் (18) ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது பின்னவல, ஶ்ரீ தலதா மாளிகை, காலி நகரம் மற்றும் துறைமுகம் போன்ற இடங்களுக்கு சுற்றுலாவை மேற்கொண்டனர். மேலும் குக்குளேகங்கையிலுள்ள ‘லாயா லெஷர்’ ஹோட்டலில் இம் மாதம் (17) ஆம் திகதி இரவு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்து வினோதமான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களும் இணைந்து கொண்டார்.

இந்திய முப்படையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம் மாதம் (15) ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவர்கள் இந்தியாவிலுள்ள புனித போத் கஜா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து புறப்படும் போது விமான நிலையத்திலிருந்து இராணுவ ஆளனி நிருவாக பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர , இராணுவ நகர்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ ஐ மாரசிங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தார்கள். latest Running | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf