06th June 2019 19:43:54 Hours
தியதலாவையில் இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகளுக்கான உல்லாச விடுமுறை விடுதி இம் மாதம் (6) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த உல்லாச விடுதி திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இவரை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு பதவிநிலை சேவை கட்டளை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வரவேற்றார்.
பின்பு இராணுவ தளபதி கண்டி கலாச்சார நடன குழுவினரினால் வரவேற்று சுற்றுலா விடுதிக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி மஹா சங்க தேரரின் தலைமையில் சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களுடன் இந்த புதிய சுற்றுலா விடுதி திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களினால் சுற்றுலா விடுதி வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த சுற்றுலா விடுதி கட்டடக்கலை வடிவமைக்க இலவசமாக ஒத்துழைப்பு வழங்கிய கட்டிட கலைஞரையும் இந்த நிகழ்வினூடாக இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள் கௌரவித்தனர்.
இறுதியாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி அவர்களினால் இராணுவ தளபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மற்றும் சேவையிலுள்ள உயரதிகாரிகள் , படையினர்கள் இணைந்து கொண்டனர்.Best jordan Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp