04th June 2019 16:49:46 Hours
குருணாகல் மல்லியதேவ மொடல் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இம் மாதம்(4) ஆம் திகதி காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலையைச் சேர்ந்த 121 கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்களுக்கு மாணவ தலைவ சின்னங்களை சூட்டி கௌரவித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையையும் ஆற்றினார்.
பாடசாலை அதிபர் திரு எஸ். எம். டீ உதித பண்டார அவர்களது அழைப்பையேற்று இராணுவ பதவி நிலை பிரதானி இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்தார். latest jordan Sneakers | Nike Shoes