18th March 2019 16:13:16 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் புதிய இராணுவ ஆளனி நிருவாக பணிப்பாளராக இம் மாதம் (18) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
இவர் 37 ஆவது இராணுவ ஆளனி நிருவாக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் இதற்கு முன்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின் தனது கடமைகளை பொறுப்பேற்றார். அதன் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
மேஜர் ஜெனரல் தேவிந்திர பெரேரா அவர்கள் ஓய்வூதியம் பெற்றதன் பின்பு இந்த பதவிக்கு பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் நியமிக்கப்பட்டார். Best Sneakers | Nike