Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2019 12:30:21 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி சமூக தலைவர்களை சந்திப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் மதகுரு தலைவர்கள், சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வுகள் மட்டக்களப்பு சிவில் சமூக சங்கத்தின் தலைவர் திரு. எஸ் மமன்கராஜ அவர்களது பூரண ஏற்பாட்டுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த ஒன்று கூடல் நிகழ்வு மட்டக்களப்பு ஆயர் விடுதியில் 20 அதிதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலின்போது மட்டக்களப்பு மாவட்ட ஆயர் அருட் தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பின் போது இனங்களுக்கு இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கம் தொடர்பாக ஆராயப்பட்டது. அச்சமயத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் மிஹிந்து பெரேரா, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமை புரியும் லெப்டினன்ட் கேர்ணல் சுதத் சமரகோன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதர்ஷன் போன்றோர் இணைந்திருந்தனர்.

மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி (7) ஆம் திகதி திங்கட் கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் திரு. எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லா அவர்களை அவரது பணிமனையில் சந்தித்து அவர்களுக்கு படைத் தளபதியினால் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. Sports brands | Nike Off-White