Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2018 15:05:32 Hours

இராணுவ பதவி நிலை அதிகாரிகளுக்கான புதிய தங்குமிட வசதி கட்டிடங்கள் திறந்து வைப்பு

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமை புரியும் பதவி நிலை அதிகாரிகளுக்கு புதிய தங்குமிட வசதிக் கட்டிடங்கள் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களினால் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டது. பத்து அறைகளை முழுமையாக கொண்டு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த கட்டிடம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் 22 இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ.சி தேசபிரிய அவர்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. கட்டிட திறப்பு நிகழ்வின் போது பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சேனா வடுகே, நிர்வாக பிரதானி பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலாள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Running sport media | Nike