Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2018 10:16:45 Hours

இராணுவத்தினருக்கு 'தனிப்பட்ட நடத்தை' தொடர்பான விழிப்புணர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் 'தனிப்பட்ட நடத்தை' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மன நல சேவைகள் பணியகத்தின் பணிப்பாளரான கேர்ணல் ஆர். எம். எம் மொனராகல அவர்களது தலைமையில் குழுவினர் 57, 65 மற்றும் 66 ஆவது படைப் பிரிவுகளுக்கு சென்று இந்த விழிப்புணர்வுகளை நடாத்தினர்.

மூன்று நாட்கள் நடாத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தில் நட்பின்மை, குடும்ப வாழ்க்கை தொடர்பான முன்னேற்ற விரிவுரைகள் இடம்பெற்றன.

Mysneakers | Nike Air Max