12th July 2018 18:00:24 Hours
பாதுகாப்பு சேவை 2018 ஆம் ஆண்டிற்கான கரம் போட்டி ஜூலை மாதம் 10 – 11 ஆம் திகதிகளில் பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
இந்த போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றி கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த கரம் போட்டியில் இராணுவ ஆண், பெண் அணியினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
மேலும் இந்த பரிசளிப்பு நிகழ்வில் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, இராணுவ கரம் சங்கத்தின் தலைவர் பிரகேடியர் ரஞ்சித் தர்மசிரி மற்றும் கரம் பயிற்றுவிப்பாளரான தம்மிக விஜயசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.
best Running shoes | Shop: Nike