Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2018 15:41:49 Hours

‘பாத யாத்திரை’ பக்தர்களை படைத் தளபதி சென்று பார்வை

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை நிமித்தம் செல்லும் பக்தர்களை பார்வையிடுவதற்காக 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி சென்றிருந்தார்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் சென்றிருந்தார்.

இவர் பாத யாத்திரை பக்தர்களுக்கு குளிர் பாணங்கள், தண்ணீர் போத்தல்களை இவரது தலைமையில் வழங்கி வைத்தார். அத்துடன் பக்தர்களுடனும் உரையாடினார்.

இந்த பணிகளில் 23 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த படை வீர ர்கள் ஈடுபட்டிருந்தனர். திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் குமன பிரதேசத்திலிருந்து இது வரைக்கும் 6000 பக்தர்கள் இந்த வழியினூடாக பாத யாத்திரைகளை மேற்கொண்டுள்ளனர். buy footwear | adidas Yeezy Boost 350