03rd May 2018 18:22:49 Hours
இலங்கை இராணுவத்தில் 34 வருடங்களுக்கு மேல் சேவையை முடித்து இலங்கை இராணுவ பீரங்கி படையணியில் 17 வருடங்கள் கட்டளை தளபதியாக சேவையில் இருந்த மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர அவர்கள் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இராணுவத்தில் இருந்து விடைப் பெற்றார்.
விடைப் பெற்று செல்லும் கட்டளை தளபதியினால் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு படுத்தும் முகமாக பனாகொடை இராணுவ பீரங்கி படையணி படைத் தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் இராணுவ நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீரங்கி படையணி மற்றும் தன்னார்வ படையணியும் இணைந்து மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், விடைப் பெற்று செல்லும் இந்த கட்டளை தளபதி ஆனைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சாஜன் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கு பின் அனைத்து படையினர்களுடன் மதிய வருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர அவர்கள் 34 வருடங்களுக்கு மேல் தனது திறமையால் நாட்டுக்கு சேவை செய்ததன் நினைவாக இப் படையணி வளாகத்தில் மரக் கன்றும் நட்டு வைத்தார்.
விடைப் பெற்று செல்லும் இந்த கட்டளை தளபதியினால் பிரிய விடை உரையாற்றுதலின் போது பீரங்கி படையணியின் சேவை செய்யும் காலத்தில் படையினரால் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக் நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் இரவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
Running sport media | NIKE AIR HUARACHE