Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2018 15:30:49 Hours

இராணுவத்தினரால் மலசலகூட வசதிகள்

நுவரெலிய மாவட்டத்தில் உள்ள கொட்டகல தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களுக்கு சுகாதார வசதிகள் நிமித்தம் இராணுவத்தினரால் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனுசரனையில் பொறியியலாளர் சேவை படையணியினர் மற்றும் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இந்த நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பதின்மூன்று இலட்ச ரூபாய் செலவில் புதிய மலசலகூடம் நிரமானிக்கப்பட்டன.

இந்த கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஈ.ஆர்.பி வீரவர்தன அவர்கள் வருகை தந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

latest jordans | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD