Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 09:20:55 Hours

கஜபா படையணி கூடைப் பந்தாட்ட போட்டியில் சம்பியன்

யாழ் பாதுகாப்பு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கூடைப் பந்தாட்ட போட்டிகள் (16) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

இராணுவத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த விளையாட்டுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த போட்டியில் இராணுவத்திலுள்ள 15 படையணிகள் பங்கு பற்றிய இடையில் இறுதிச் சுற்றுப் போட்டி 14 ஆவதுகஜபா படையணி மற்றும் 4 ஆவது விஜயபாகு காலாட் படையணிக்கு இடையில் இடம்பெற்றன. இப்போட்டியில் 14 ஆவது கஜபா படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டு சம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வெற்றீயீடிய படை வீரர்களுக்கு பரிசினை வழங்கினார்.

திரு எஸ். சிவதாஸ், திரு. ஜே. பிரசாந்தன், திரு பி. ஜோகனன் மற்றும் முகுந்தன் அவர்கள் இந்த நிகழ்வில் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.

latest Running | Nike Air Max 270