Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 09:29:54 Hours

64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிவராத்திரி பூஜைகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினால் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் சிறப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்த கோயில் நிர்வாத்தின் வேண்டுகோளின் பிரகாரம் 3 ஆவது விஜயபாகு காலாட்படைப் படையினரால் இந்த கோயிலில் பக்தர்களது நலன்புரி நிமித்தம் பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

மேலும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்தஆலயத்தில் சிறந்த முறையில் சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவின் எண்ணக் கருவிற்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர அவர்களின் தலைமையில் இந்த பணிகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் (13) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இந்த இராணுவத்தினரது ஒத்துழைப்பையிட்டு கோயில் திருச்சபையினால் இராணுவத்தினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

jordan Sneakers | Nike