27th March 2024 19:10:35 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2024 மார்ச் 19 ஆம் திகதி லக்ஷபான பிரதேசத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.
இராணுவத் தளபதியின் கருத்தின்படி, படையணி மட்டத்தில் நிதிப்பிரச்சினையுடைய குடும்பங்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிக்கும் சமூகம் சார்ந்த திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது.
பயனாளியின் உத்தேச வீட்டிற்கான அடிக்கல் இல. 3/31 ஏ, கும்புருஹேன, லக்ஷபான முகவரியில் வசிக்கும் திருமதி கே.ஜி. மாலா மங்கலிகா அவர்களுக்காக படையினரால் நடப்பட்டது.
112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், 112 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.