Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2021 10:57:20 Hours

யாழ். படையினரால் உடுவில் குடும்பத்திற்கு புதிய வீடு

யாழ். குடாநாட்டில் யாழ் பாதுகாப்பு படையினரால் உடுவில் பகுதி மற்றொரு ஏழைக் குடும்பத்திற்கு திரு குமார வீரசூரியா மற்றும் அவரது நண்பர்களின் நிதியுதவியுடன் புதிய வீட்டை அமைத்துள்ளனர் .

கிராம அதிகாரியின் தேவையுடைய குடும்பமாக உறுதிப்படுத்தப்பட்ட தனது குழந்தைகளுடனும் வாழும் திருமதி தேசி இந்திரா ரதிஷ் வாழ்க்கைக்கு கைகொடுக்கம் வகையில் கடும் நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் யாழ் பாதுகாப்புப் படைகள் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 51 வது படைப்பிரிவின் 511 வது பிரிகேட்டின் 9வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் இந்த மனிதாபிமான திட்டத்தை முன்னெடுத்தனர்.

வியாழக்கிழமை (14) தை பொங்கல் தினத்திற்கு இணையாக இந்து சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதான விருந்தினராக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார கலந்து கொண்டு குடும்பத்திற்கு வீட்டு உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் பரிசளித்தார்.

51வது படைபிரிவு தளபதி, யாழ் பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொது பணி, 511, 512, 513 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், படையினர் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். short url link | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers