Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2019 22:00:34 Hours

யாழ் இராணுவப் படையினரால் சக்கர நாற்காலிகள் மற்றும் கோவில் கட்டடம் போன்ற மீள் திருத்தப்பட்டன

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு ஜீவன் பிரசாத் லியனகே அவர்களின் அனுசரனையுடன் யாழ் மாவட்டத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற தேவையுள்ள நபர்களுக்கான 20 புதிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுகள் அனுசரனையாளர்களான திரு திருமதி அன்ராஸ் ஷஹாரியா போன்றவர்களின் பங்களிப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் தலைமையில் இப் பிரதேச கிராம சேவகரவர்களால் தேர்தெடுக்கப்பட்ட அங்கவீனமுற்ற மக்களுக்காக சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. மேலும் இவ் அங்கவீனமுற்றவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான போக்கு வரத்து வசதிகளை இராணுவத்தினர் வழங்கினர்.

இதே நிகழ்வில் கேர்ணல் ருவன் ஹேரத் அவர்களின் அனுசரனையில் 75மூக்குக் கண்ணாடிகள் தேவையுள்ள நபர்களுக்காக கடந்த வெள்ளிக் கிழமை (17) வழங்கப்பட்டது.

அதேவேளை தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு தொல்புரம் பட்டானை வைரவர் கோவிலானது படையினரால் மீள் திருத்தப்பட்டதுடன் இப் பணிகளை கண்காணிப்பதற்கான விஜயத்தை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் மேற்கொண்டிருந்தார். latest Running Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE