Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 11:20:30 Hours

மொரட்டுவை பல்கலைக் கழகத்தினரால் யாழ் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மொரட்டுவை பல்கலைக் கழகத்தின் ரியோ கழகத்தினரால் யாழ் பிரதேசத்தில் காணப்படும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வட தென் பிராந்தியத்தில் காணப்பட்ட உடுத்துரை மஹா வித்தியாலயத்தின் 47 மாணவர்கள் மற்றும் அலியாவளை சிசிடிஎம் மஹா வித்தியாலய மாணவர்கள் போன்றோருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) வழங்கப்பட்டது.

இதில் 40 மாணவர்கள் கல்வி பயிலுகையில்; அங்கவீனமுற்ற மாணவர்கள் 7பேரும் காணப்படுவதோடு ஆலியாவளை சிசிடிஎம் மகா வித்தியாலயத்தில் இப் பாடசலை உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு இந் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை 55ஆவது படைத் தலைமையம் மற்றும் 553ஆவது மற்றும் 10ஆவது விஜயபாகு காலாட் படையணி படைப் பிரிவுகள் போன்றன வழங்கியிருந்தன.

மேலும் இந் நிகழ்விற்கான ஆசிகளை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் வழங்கியிருந்ததோடு ரியோ கழகத்தின் தலைவரான திரு கசுன் ராமநாயக்க அவர்களால் இப்; பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதன் போது பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் சில உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | adidas NMD Human Race