06th January 2021 21:45:22 Hours
இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் (SLEME) பெருமைமிக்க படை வீரரான இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்கள் தான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வியாழக்கிழமை (6) இராணுவத் தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அங்கு அவருக்கு தளபதியவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சேவையாற்றியவரும் இராணுவத்தில் குறிப்பாக இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பல முக்கிய நியமனங்கள் வகித்தவருமான ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்களுடனான கலந்துரையாடலின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவரின் சேவையைப் பாராட்டினார்.
வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் விருப்பங்களுக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுசெல்லும் சிரேஷ்ட அதிகாரியினை பாராட்டும் முகமாக சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார்.மேலும் சிரேஷ்ட அதிகாரியினாலும் இராணுவத் தளபதிக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. Sneakers Store | シューズ