25th September 2020 17:46:40 Hours
அமைதிகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பதவி நிலை பிரதானியின் தலைமையிலான குழுவினர் உத்தியோகபூர்வமாக மாலியில் உள்ள இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படையினரை சந்தித்ததுடன், அங்குள்ள (கொவிட் -19) நோய் தொற்றுக்கு எதிரான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
அந்த குழுவினர் வளாகத்தை உன்னிப்பாக ஆய்வு செய்துடன், தடுப்பு நடவடிக்கைகள், முகாமுக்குள் மற்றும் அவர்களின் நகர்வுகள் போன்றவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதோடு, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனது கருத்துகளை பரிமாற்றம் செய்துகொண்டனர். அவர்கள் வெளிசெல்லும் முன் இந்த ஏற்பாடுகள் தொடர்பாக அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல், கிழக்கு துறை மருத்துவ அலுவலகத்தில் உள்ள சீன அமைதி காக்கும் மிஷனின் லெவல் 2 இராணுவ மருத்துவமனையின் (சிஎச்என் எல் 2) தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான தூதுக்குழுவும், அதே மருத்துவமனையின் மற்ற ஏழு மருத்துவ ஊழியர்கள், 2020 செம்டெம்பர் 16 ஆம் திகதி மலேரியா நோய்தடுப்புக்கான மருந்து பொருட்களை லெவல் 1 மருத்துவமனையில் உள்ள இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படையினருக்கு வழங்கினர். latest Nike release | Jordan Shoes Sale UK