13th November 2019 15:23:10 Hours
ஸ்ரீ ஜயவர்த்தனபுரயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தில் அதன் சம்பிரதாய நிகழ்வுகளுடன் பதவியேற்புக்கு பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (9) ஆம் திகதி காலை பல மத உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சமய மத நிகழ்வில் ஆசீர்வாதங்களால் முழு தலைமையக வளாகமும் புனிதப்படுத்தப்பட்டது.
இரவு முழுவதும் 'பிரித்' பூஜை வழிப்பாட்டுடன் (ஹீல் தான) தானமும் வழங்கப்பட்டது. (தனி கதையைப் பார்க்கவும்) இலங்கை இராணுவம் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களின் பிரார்த்தனைகளில் முக்கியத்துவம், மரியாதை ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் நாடு பல மத நம்பிக்கைகள் மற்றும் நல்லிணக்கத்துடன் இணைந்துள்ளது. கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களின் அமைப்பில் உள்ள அந்தந்த மதங்களின் முழு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பெல்லோஷிப், முஸ்லிம்கள் சங்கம் மற்றும் இராணுவத்தில் உள்ள இந்து சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் பல படையினர்கள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை (9) முழுநேர பிரார்த்தனைகள், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும், மத மற்றும் இன நல்லிணக்கம் பல மணிநேரங்களில் இடம் பெற்றன. அத்துடன் அந்த கத்தோலிக்க, மற்றும் மௌலவி மற்றும் குருக்கல் (முஸ்லீம் மற்றும் இந்து மதகுருமார்கள்) மற்றும் பாதிரியார்கள்) புதிய வளாகத்தில் விரிவான மத பிரார்த்தனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் விரிவான முறையில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த பிரார்த்தனைகளில் இராணுவத் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்று, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களின் மத பிரமுகர்களுக்கு ஒவ்வொரு பிரார்த்தனை முடிவில் பாராட்டுப் பரிசுகளையும் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் அனைத்து இராணுவ மத அமைப்புகளிலும் தலைவர்கள் அந்த மத பிரிவுகளை ஒழுங்கமைப்பதில் தலைமை வகித்தனர். Sportswear free shipping | Mens Flynit Trainers