Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2019 19:29:11 Hours

புதிய இராணுவ தலைமையக அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையக கட்டிடத் தொகுதியில் இன்று காலை 14ஆம் திகதி இராணுவத் தளபதி தனது கடமைகளை இராணுவ சம்பிரதாய மற்றும் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், இராணுவ தளபதியவர்களுக்கு இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டதோடு, தளபதியவர்கள் இராணுவ தலைமையக படையணியின் கட்டளை அதிகாரி கேணல் இந்திக பெரேரா அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அனைத்தொடர்ந்து இடம்பெற்ற மத வழிபாடுகளின் பின்னர் தளபதியவர்கள் தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.மேலும் பல பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உத்தியோகபூர்வமான ஆவணத்தில் தனது கையொப்பத்தினை இட்டார்.

மேலும், இந்நிகழ்வின்போது இராணுவ பதவிநிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதிக்கட்டமாக தேநீர் விருந்துபசார நிகழ்வுகள் இடம்பெற்றன. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையக கட்டிடத் தொகுதியானது வைபவரீதியாக கடந்த 8ஆம் திகதி முப்படைகளின் தளபதி மற்றும் அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK