Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2022 15:17:50 Hours

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி அலுவலகத்தில் வருடத்திற்கு முதல் நாள் வேலை ஆரம்பம்

2022 புத்தாண்டு மற்றும் முதல் வேலை நாளின் தொடக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி அலுவலகத்தின் ஊழியர்கள், சம்பிரதாயங்களுடன் பாரம்பரிய இனிப்பு வகைகளுடன் தங்கள் நிறுவனத் தலைவரை வரவேற்றனர்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க வரவேற்றார். கடற்படை பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் எச்எல்பீடி சுகதபால, மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலக ஒருங்கிணைப்பு பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வீ.பி பாலசூரிய, ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, வளாகத்தில் மங்கள விளகேற்றியதுடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார், இந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட, ஊழியர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

பதவிநிலை அதிகாரி 2 மேஜர் டி.ஜி.என்.பி தங்கொல்ல தனது வரவேற்புரையில் விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறப்பு அம்சமாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலக வளாகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு புத்தாண்டு ஊக்கத்தொகையாக பல பரிசுப் பொதிகளை வழங்க ஜெனரல் சவேந்திர சில்வா அழைக்கப்பட்டார். இந்நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்