18th September 2019 16:21:14 Hours
(ஊடக வெளியீடு)
இராணுவ தளபதியான லெப்டினன்ட் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தலைமையகத்திற்கு இன்று பகல் (18) ஆம் திகதி வருகை தந்த பாதிப்புற்ற விஷேட தேவையுடைய படை வீரர்கள் இராணுவ தளபதியை சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பாக கலந்துயாடலை மேற்கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது இராணுவத்தில் காயமுற்ற அதிகாரியாக நான் இருந்தமையால் விஷேட தேவையுடைய படை வீரர்களது நிலைமைகளை நான் நன்கு அறிவேன். ஆகையால் விஷேட, தேவையுடைய படை வீரர்களின் விடயம் தொடர்பாக மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களால் இம் மாதம் (17) ஆம் திகதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார் என்று இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும் இராணுவ தளபதியவர்கள் இந்த விடயம் தொடர்பாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிக் குழுவானது நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவதானித்து கொண்டிருப்பதாகவும் உறுதியளித்து இன்னும் சில காலம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு இந்த படையினர்களுக்கு இராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்தார். (முடிவு) spy offers | Gifts for Runners