05th January 2021 10:29:55 Hours
கூட்டு ஆடை தொழில்சாலை சங்கத்தின் தலைவர் திரு ஏ சுகுமாரன் தலைமையில் ஒரு உயர்மட்ட தூதுக்குழுவினர், கடந்த ஆண்டில் ஆடைத் துறையின் தடையற்ற செயல்பாட்டை எளிதாக்கியமைக்காகவும் மற்றும் மேலும் தொழில்துறையில் உள்ள ஊழியர்களிடையே தொற்றுநோய்களின் இரண்டாவது அலைகளைத் தவிர்ப்பதற்கான உதவி பெறுவதற்கான சாத்தியங்களை ஆராயும் முகமாகவும், கொவிட் -19 பணிக்குழுவிற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் தளபதி மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை திங்கள்கிழமை (4) பிற்பகல் சந்தித்தனர்.
மினுவாங்கொடை கொவிட் கொத்தணியின் பின்னர் ஆடைத் துறை ஊழியர்களிடையே தொற்றுநோயை பரவலாகக் கட்டுப்படுத்துவதற்காக விரைவாக தொடங்கப்பட்ட பணிக்குழுவின் சரியான நேரத்திலான பொறிமுறை மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை குறித்த தூதுக்குழு முதலில் பாராட்டியது. சீதாவக்க, ரத்னபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சமீபத்தில் சில கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பின்னர், சீதாவக்க மற்றும் பிற இடங்களில் உள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் கடைப்பிடிப்பதற்கான சிறந்த தடுப்பு பாதுகாப்பு முறை தொடர்பாகவும் அவர்கள் ஆலோசனைகளை கேட்டனர். உலகெங்கிலும் தொற்று அச்சுறுத்தல் இருந்தபோதிலும், பணிக்குழுவின் பாதுகாப்பு வலையமைப்பு, இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அதன் வருவாயை திறம்பட உயர்த்த உதவியது, இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, இது ஒரு சாதனை , ஜனாதிபதியின் தலையீட்டால் சாத்தியமானது.
இந்த ஆபத்தான வைரஸிலிருந்து நாட்டிலிருந்து விடுபட அர்ப்பணித்துள்ள பங்குதாரர்கள் மீது ஆடைத் துறைத் தலைவர்கள் முழு நம்பிக்கையையும் கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் ஆடை ஊழியர்களிடையே மீண்டும் அதே தடுப்பு உத்திகளைப் பயன்படுத்துமாறு ஆடைத் துறைத் தலைவர்கள் குறித்த பணிக்குழுவிடம் கேட்டுக்கொண்டனர்.பதிலுக்கு அவர்களின் அக்கரைகளை பாராட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, பிரதிநிதிகளிடம், ஜனாதிபதியின் தலைமையிலான பணிக்குழு, நாட்டின் பொருளாதாரத்தின் சுமூகமான செயல்பாடு மற்றும் பரிமாற்றம் செய்பவர்களின் நல்வாழ்வு குறித்து அதிகபட்ச கவனம் செலுத்துமாறு எப்போதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
"ஆரம்பத்தில், 1% ஊழியர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கும், சுகாதார பாதுகாப்புக்காக அடையாளம் காணப்பட்ட இடங்களில் அவர்களை வைத்திருப்பதற்கும் நாங்கள் உட்படுத்தப்பட்டோம் மற்றும் அதே மூலோபாயம் கட்டுநாயக்கவிலுள்ள சுதந்திர வர்தக வலயத்திலுள்ள உள்ள பிற தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. அந்த மூலோபாய முறைகள் மற்றும் சரியான நேரத்தில் கட்டுப்பாடுகள் அதன் மேலும் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டது. அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு சீதாவக்க மற்றும் ஏனைய சுதந்திர வர்தக வலயங்களில் அதைத் தடுப்பதற்கான அதே ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம், " என ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதியளித்தார்.
பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரின் திறன்களால் ஈர்க்கப்பட்ட இந்த தூதுக்குழுவினர, எதிர்காலத்தில் மேலும் பல பரிசோதனைகளை நடத்துவதற்காக ஆயுதப்படைகளுக்கு அதிக பி.சி.ஆர் இயந்திரங்களை பரிசளிப்பதாக நொப்கோவின் தலைவருக்கு உறுதியளித்தனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் பணிக்குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பிரதிநிதிகள் குழுவில் கூட்டு ஆடை தொழில்சாலை சங்க கடந்த காலத் தலைவர் திரு அஷ்ராப் உமர், கூட்டு ஆடை தொழில்சாலை சங்க கடந்த காலத் தலைவர் திரு நோயல் பிரியதிலக, கூட்டு ஆடை தொழில்சாலை சங்க கடந்த காலத் தலைவர் திரு ஷரத் அமலியன், கூட்டு ஆடைதொழில்சாலை சங்க பிரதி தலைவர் திரு மகேஷ் ஹிர்டராணி மற்றும் வரையறுக்கப்பட்ட ஜே ஜே மில்ஸ் திரு ஸ்ரீகுமார் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உள்ளடங்குவர். Running Sneakers | nike