Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2021 13:30:38 Hours

தொடரும் யாழ்ப்பாண தளபதியின் களப் பயணங்கள்

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு பொறுப்பேற்றதனட பிறகு 52 வது படைப்பிரிவுத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (25) தனது முதல் களப் பயணத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பெரிஸ் வரவேற்றார். அவரது வருகையை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் தளபதியால் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் 52 வது படைப்பிரிவின் தளபதி பொறுப்பு பகுதி குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். பின்னர் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 52 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றினார்.

அதேவேளை மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு 52 வது படைப்பிரிவின் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலை மற்றும் 7 (தொ) கஜபா படையணி என்பவற்றையும் பார்வையிட்டார்

இந்நிகழ்ச்சியில் 52 வது படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.