Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2020 22:00:53 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 286 நபர்கள் தங்களது வதிவிடங்களுக்கு அனுப்பி வைப்பு

இரண்டு வார காலமாக கட்டகெலியாவ, கண்டக்காடு மற்றும் விமானப் படையினரால் நிர்வாகித்து வரும் இரனைமடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மருத்துவ நடைமுறைகள் முடிந்த பின்பு தரமான சான்றிதழ்களுடன் 286பேர்கள் இன்று (4) ஆம் திகதி தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நபர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இவர்களது காலி, கொழும்பு, கண்டி மற்றும் குருணாகல் பிரதேசங்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளுடனும் சிற்றூண்டி வசதிகள் வழங்கி வைத்து இவர்களை அவர்களுக்கு உரிய இடங்களிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இந்த நபர்களை பார்வையிடுவதற்கு கட்டளை அதிகாரிகள் இந்த இடத்திற்கு வருகை தந்து இவர்களை வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordan Sneakers | M2k Tekno