11th January 2021 12:29:51 Hours
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அர்ப்பணிப்பு சேவைகளைப் செய்த ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவ செயலாளரும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்களின் வருங்கால முயற்சிகளுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (11) காலை தனது அலுவலகத்தில் வைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பு நினைவு சின்னத்தினையும் வழங்கினார்.
பெருமை வாய்ந்த கஜபா படையணியின் படையினரில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடனான உரையாடலின் போது தனது தொழில் வாழ்க்கையின் நினைவுகளை நினைவு கூர்ந்த்தோடு சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். மேஜர் ஜெனரல் கமகே தனது சேவைக்காலத்தில் இராணுவம் மற்றும் கஜபா படையணியில் பல முக்கிய நியமனங்கள் வழங்கியுள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளைச் செய்ய நாடு தயாராக உள்ள ஒரு நேரத்தில் இராணுவத்தில் அனைத்து பிரதான நியமனங்களை நிர்வகிக்கும் அலுவலகமான இராணுவ செயலகத்தின் இராணுவச் செயலாளராகவும் பணியாற்றியதற்காக இராணுவத் தளபதி அவரைப் பாராட்டினார்.
வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி தளபதியின் வாழ்த்துக்கள் மற்றும் சிந்தனை ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்த அதேவேளை தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தலைவரிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார். உரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னத்தை வழங்கினார். ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியினாலும் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. latest Running Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff