Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2020 16:47:06 Hours

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ அவர்களின் சேவையை பாராட்டிய இராணுவத் தளபதி

இலங்கை சிங்கப் படையணியின் மேலும் ஒரு பெருமைமிக்க இராணுவ அதிகாரியும் 61 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ அவர்கள் தான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை புதன்கிழமை (23) இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் இராணுவத் தளபதியவர்கள் பாராட்டினார் மற்றும் இராணுவத்திலும் குறிப்பாக இலங்கை சிங்கப் படையணியிலும் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ள ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ அவர்களுடன் தளபதி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஓய்வுபெற்றுச் செல்லும் தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்குவிப்பை பற்றி குறிப்பிட்ட சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்தார்.கலந்துரையாடலின் இருதியில் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியினை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியினாலும் நினைவுச் சின்னம் தளபதிக்கு வழங்கப்பட்டது. best Running shoes brand | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News