29th June 2022 15:30:08 Hours
ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் Tan Nagak & Kee Meng Leng Foundation நிறுவனத்தின் வண. தலகல சுமணரதன நாயக்க தேரரின் நிதி உதவியை கொண்டு, நாடளாவிய ரீதியிலுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ். மாத்தறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, கம்புருபிட்டிய பிரதேச செயலகப் பகுதிகள், திக்வெல்ல கும்புரேகொட விகாரை பகுதி மற்றும் கொட்டபொல நாளபே சனசமூக நிலைய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 650 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஜூன் 23-24 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த நன்கொடை திட்டம் 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 613 வது பிரிகேடினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. 613 வது பிரிகேட் தளபதி கேர்ணல் கே.வி.ஐ.எல் ஜயவீர, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோகத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.