Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 15:36:30 Hours

இராணுவத்தினரால் வறிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வீடு நிரமானித்து கையளிப்பு

மாங்குளம் ஓலுமடு பிரதேசத்தில் வசித்து வந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த திரு பத்மநாதன் பகிரதன் அவர்களுக்கு தலகல ஶ்ரீ சித்தார்த்த அமைப்பின் தலைவர் மதகுருவான தலகல ஶ்ரீ சுமனாரத்ன நாயக்க தேரர் அவர்களின் நிதி அனுசரனையுடன் இராணுவ 3 ஆவது கஜபா படையணியின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டு வீட்டு உரிமையாளருக்கு இம் மாதம் (14) ஆம் திகதி இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக் காட்டலின் கீழ் 574 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் புத்திக பெரேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த வீடு கையளிப்பு நிகழ்வானது இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிமையாளருக்கு கையளிக்கப்பட்டன. spy offers | NIKE