21st September 2019 10:48:28 Hours
வடமாகாண ஆளுனரான கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (20) ஆம் திகதி யாழ் ஆளுனர் பணிமனையில் சந்தித்தார்.
இவர்களது இந்த நல்லுறவு சந்திப்பின் போது, யாழ் குடா நாட்டின் நல்லிணக்க நகர்வுகளின் முன்னேற்றம், இராணுவத்தின் மனிதாபிமான திட்டங்கள், சிவில்-இராணுவ திட்டங்கள், தேசத்தைக் கட்டமைக்கும் பணிகள், சமூக-கலாச்சார திட்டங்களை மேம்படுத்துதல், வீடு நிர்மாணித்தல், வறுமை ஒழிப்பு தொடர்பான கருத்துக்களைப் இருவரும் பகிர்ந்து கொண்டனர். திட்டங்கள், முதலியன. பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு குறித்து ஆளுநர் தனது மகிழ்ச்சியை இராணுவ தளபதிக்கு வெளிப்படுத்தினார். மேலும் இராணுவத்தின் நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் வடமாகாண ஆளுனர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக நலன்புரி திட்டங்களுக்கு தனது வாழ்த்துக்களை இராணுவ தளபதிக்கு தெரிவித்தார். இறுதியில் இராணுவ தளபதியவர்கள் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னமொன்றை பரிசாக வழங்கி வைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களும் இணைந்து கொண்டார். Running Sneakers Store | Air Jordan