24th January 2020 20:31:06 Hours
இலங்கை இராணுவ ஆண்கலுக்கான தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது ரோயல் மாஸ் எரினா விளையாட்டரங்கில் ஜனவரி மாதம் (24) ஆம் திகதி இடம் பெற்றதில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணியினர் வெற்றிபெற்றனர்.
இப் போட்டியானது ஜனவரி 21 -24 ஆம் திகதிகளில் வரை நாடு முழுவதிலும் உள்ள குத்துச்சண்டை கிளப்புகளின் பங்களிப்புடன் நடைபெற்றது.
இராணுவ குத்துச்சண்டை அணியினர் ஆட்டமிழகாமல் ஆடியதில் 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்றதுடன் இராணுவ குத்துச்சண்டை அணி ஆண்டின் மிக வெற்றிகரமான குத்துச்சண்டை கிளப் என்று பெயர்பெற்றுள்ளது.
அதன்படி, இராணுவ பெண் குத்துச்சண்டை வீரர்களும் 3 வெண்கல பதக்கங்களை சுவிகரித்துக்கொண்டனர்.
இப்போட்டியில், 1 ஆவது விஜயபாகு படையணியின் கோப்ரல் டபிள்யூ.ஏ.ஆர் சந்தகொலும் இந்த ஆண்டின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
இலங்கை இராணுவ அணியினர் 2019 இல் இலங்கையில் நடந்த 3 முக்கிய போட்டிகளான தேசிய சம்பியன்ஷிப், லேட்டன் கிண்ணம், கிளிபோர்ட் கிண்ணம் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.Running Sneakers Store | adidas Yeezy Boost 350